பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதியை உங்களது பேஸ்புக் கணக்கில் பெறுவது எப்படி?

இருபத்திஓராம் நூற்றாண்டில் இணையத்தை உபயோகிக்கும் இளைய சமூதாயத்தினரிடையே புரட்ச்சியை ஏற்படுத்தி இருப்பது பேஸ்புக் சமூக வலைத்தளம் என்று கூறினாலும் மிகையாகாது. இளைஜர் யுவதி என்று மட்டுமல்லாது பேஸ்புக் சமூக வலைத்தளம் ஆனது அனைத்து தரப்பினராலும் விரும்பி உபயோகிக்கப்படும் ஒரு சமூக வலைத்தளமாகும்.

2004 ஆம் ஆண்டில் இணையத்தில் உருவெடுத்த பேஸ்புக், 2008 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் பிரபல்யமடைய ஆரம்பித்தது. அன்றிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் தனது சமூக வலைத்தளத்தை உபயோகிக்கும் பாவனையாளர்களின் சௌகரியத்தை கருத்திற்கொள்ள தொடங்கினார்.


எந்த ஒரு தளத்தின் வெற்றிக்குமே அதை உபயோகிக்கும் பயனர்களின் சௌகர்யமே  மிக முக்கியமானது என்பதை சரி வர தெரிந்து கொண்ட பேஸ்புக் நிறுவனம், தனது பயனர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை பேஸ்புக் தளத்தில் எமக்கு தர ஆரம்பித்தது.

பேஸ்புக் தளத்தில் இன்று வரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வசதிகளில் மிகவும் சிறந்த வசதியாக காணப்படுவது, குறிப்பிட்ட எமது நண்பர்களின் பதிவுகளை லைக் செய்து விருப்பம் தெரிவிப்பது. ஆனால் இதற்கு எதிர்மறையான வசதியை பேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் நிறுவனத்திடம் கேட்டு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

அதாவது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பதிவு எமக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த பதிவை டிஸ்லைக் செய்யும் வசதி. என்னை பொருத்தவரை கண்டிப்பாக பேஸ்புக்கில் இந்த வசதி ஒரு போதும் வராது.
கோடிக்கணக்கான பயனர்கள் தொடர்ந்தும் டிஸ்லைக் வசதி வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தை வேண்டிக்கொள்ள சாமர்த்தியமாக செயற்பட்ட மார்க், தற்போது பேஸ்புக் சிறப்பு ரியக்சன் என்ற பெயரில் உணர்வுகளை வெளிப்படுத்துவதட்கான வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்தை கீழே காணலாம்.


அவரின் கருத்துப்படி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதியை ஏற்கனவே பேஸ்புக்கில் காணப்படும் லைக் பட்டன்-ஐ பிடித்து  சிறிது நேரம் அழுத்தி பிடித்து கொண்டிருப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


உலகம் முழுதும் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு இந்த வசதி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஒரு சிலருக்கு இந்த வசதி கிடைக்கவில்லை. பெரும்பாலும் இன்று அல்லது ஓரிரு நாட்களுக்குள் இந்த வசதியை ஆசிய நாட்டை சேர்ந்த பேஸ்புக் பயனர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.